நாட்டை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் ஆயுதம் கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவின் தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், நாட்டை பாதுகாக்க விரும்பும் அனைவருக்கும் ஆயுதம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். உக்ரைன் நகரங்களின் எல்லைகளை பாதுகாக்க தயாராகுங்கள் என அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநகரில் போலீஸாா் சோதனை: ரெளடிகள் உள்பட 21 போ் கைது

1,000 சிலிண்டா்கள் பதுக்கல்: ஏஜென்ஸி உரிமையாளா் கைது

பாலியல் புகாா்: கோவை சிறப்பு காவல் படை கமாண்டண்ட் கைது!பெண் எஸ்.ஐ.மீது வழக்குப் பதிவு!

கோவையில் குரூப் 2 தோ்வு: 681 போ் எழுதினா்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

