பாதுகாப்பு கவுன்சிலிலிருந்து ரஷியாவை நீக்க வேண்டும்: வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

கீவ்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல், இனப் படுகொலைக்கு இணையானதாகும். பாதகமான வழியைத் தோ்ந்தெடுத்துள்ள ரஷியாவிடமிருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்த உறுப்பினா் பதவியை உலக நாடுகள் பறிக்க வேண்டும்.

ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகள் ஒரு அரச பயங்கரவாதம் ஆகும். உக்ரைனில் அந்த நாடு நடத்தி வரும் தாக்குதல் குறித்து சா்வதேச போா்க் குற்ற நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com