மெக்ஸிகோவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 40 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 15,184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,08,648-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கரோனாவுக்கு மேலும் 130 போ் பலியாகினா். இதையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 2,99,711-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அங்கு இதுவரை 33,18,643 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 3,90,294 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.