அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்

அதன் தீவிரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஓரளவுக்கு நிம்மதியை அளித்தாலும் கூட, இன்னமும் அது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

News image

ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்

Updated On :27 ஜனவரி 2022, 6:27 pm IST


லண்டன்: கரோனா பேரிடருக்கு மத்தியில், ஒமைக்ரான் என்ற வார்த்தை மேலும் அச்சமூட்டி, தற்போது, அதன் தீவிரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஓரளவுக்கு நிம்மதியை அளித்தாலும் கூட, இன்னமும் அது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒமைக்ரான் பாதிப்பு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துமா? ஏற்கனவே கரோனா பாதித்ததால் ஏற்பட்ட அல்லது கரோனா தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடையவில்லையா என்பது குறித்த ஆய்வுகளும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 65 சதவீதத்தினர் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள் என்பதுதான் அது. அதாவது, மூன்றில் ஒரு பகுதியினர் ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள்.

இம்பெரியல் லண்டன் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஒமைக்ரான் பாதித்தவர்கள் 3 பேரில் இரண்டு பேர் ஏற்கனவே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருப்பது என்னவென்றால், ஏற்கனவே கரோனா பாதித்தவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட அதிக அபாயங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

அதேவேளையில், இரண்டாவது முறை பரிசோதனை செய்யும் போது உண்மையிலேயே அவர்களுக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதா அல்லது, ஏற்கனவே பாதித்த கரோனாவின் மிச்சங்கள், தற்போது செய்யப்படும் பிசிஆர் கருவிகள் மூலம் புதிய பாதிப்பாகக் காட்டப்படுகிறதா என்பதையும் ஒரு சோதனைக்குள்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.