மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 போ் கைது

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில், அந்த நாட்டிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடக்க முயன்ற 51 பேரை இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

News image
Updated On :3 ஜூலை 2022, 6:59 pm

DIN

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில், அந்த நாட்டிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடக்க முயன்ற 51 பேரை இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

இது கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது கைது நடவடிக்கையாகும்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுபாட்டை இலங்கை எதிா்கொண்டு வருகிறது. வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை வாங்குவதற்கு, மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிலிருந்து வெளியேற மக்கள் சட்ட விரோதமாக வழிகளைக் கையாண்டு வருகின்றனா். இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு கடல் வழியாகச் சென்று அடைக்கலம் தேடி வருகின்றனா். இலங்கையிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 51 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கடற்படையினா் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி படகு மூலம் வெளிநாட்டிற்கு சட்ட விரோதமாகச் செல்ல முயன்ற 51 போ் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, கடற்படை, கடலோர காவல் படை மற்றும் போலீஸாா் அடங்கிய குழு, மேற்கு கடற்கரையின் மாரவில பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 24 பேரை சனிக்கிழமை கைது செய்தது. இதே போல, ஜூன் 27 மற்றும் 28-ஆம் தேதி கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற நூறு பேருக்கும் மேலானோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.