மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

8 பேரில் ஒருவருக்கு மன அழுத்த சிக்கல்: உலக சுகாதார நிறுவனம்

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் உலகளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஜூன் 2022, 1:08 pm

DIN

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் உலகளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன ஆரோக்கியம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகம் முழுவதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்களின் தரவுகள் குறித்த விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி கரோனா பொதுமுடக்கக் காலத்தில் உலகளவில் மன அழுத்தம் மற்றும் கவலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 25 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முந்தைய 2019ஆம் ஆண்டு மன ஆரோக்கியம் தொடர்பான சிக்கலில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம் இவற்றில் 14 சதவிகிதத்தினர் வளர் இளம் பருவத்தினர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் உலக நாடுகள் தங்களது சுகாதார நிதிநிலை அறிக்கைகளில் மன ஆரோக்கியம் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியின் அளவு ஒட்டுமொத்த சுகாதாரத் திட்டங்களில் 2 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மரணத்திலும் 20 தற்கொலை முயற்சிகள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள இந்த ஆய்வறிக்கை ஒவ்வொரு 100 மரணங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

மன அழுத்தம் தொடர்பான சிக்கல்களைக் களைவதில் உலக நாடுகள் முனைப்பு காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் வளமான வாழ்க்கைக்கு தேவையான சுகாதாரத் திட்டங்களில் மன ஆரோக்கியத்திற்கான முதலீடுகளை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.