அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகலை நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்த நியமனத்தை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். சின்சினாட்டி, சிகாகோ, நியூயார்க், பாஸ்டன் போன்ற நகரங்களில் வசித்துவந்துள்ளார்.
நிர்வாகம் மற்றும் தூதர ரீதியிலான பல முக்கிய பொறுப்புகளுக்கு முக்கிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமையன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசியல் செயல்பாட்டாளரான ஷெபாலி ரஸ்தான் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் வழக்கறிஞராக உள்ளார். அதுமட்டுமன்றி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் மனித உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியக கவுன்சிலுக்கு முன்னாள் அதிபரால் நியமனம் செய்யப்பட்ட ஷெபாலி ரஸ்தான், மேற்கு பிராந்தியத்தின் ஆலோசகராக செயல்பட்டுவருகிறார்.
மனித உரிமை அமைப்பின் சான் பிரான்சிஸ்கோ குழு உறுப்பினராகவும் வேக் ஃபாரஸ்ட் யுனிவர்சிட்டி லீடர்ஷிப் அண்ட் கேரக்டர் கவுன்சில் உறுப்பினராகவும் அவர் பணியாற்றிவருகிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பில் முதுகலை பட்டம் பெற்ற அவர், மியாமி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பு துறை படிப்பை முடித்துள்ளார்.
ஜோ பைடனுக்கான தேசிய பெண்களின் இணைத் தலைவராகவும், ஜனநாயக தேசியக் குழுவில் துணை தேசிய நிதித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு, பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அந்த பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட இவர், ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் வடக்கு கலிபோர்னியா வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: பொது விடுமுறை அறிவித்த பராகுவே அதிபர்!
பற்களின் ஈறுகளில் ரத்தம் கசிவது ஏன்?

11வது நாளாக சிஜேபி போராட்டம்: உண்ணாவிரதத்தினால் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்!

பென் ஸ்டோக்ஸிடம் பேச முயற்சித்தேன், ஆனால்... மெக்கல்லம் கூறியதென்ன?
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


