என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

அமெரிக்காவின் அதிகார மையமாக மாறுகிறார்களா இந்தியர்கள்? தூதராக நியமிக்கப்பட்ட காஷ்மீர் வம்சாவளி

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்.

News image

பைடனுடன் ஷெபாலி ரஸ்தான்

Updated On :12 மார்ச் 2022, 12:20 pm IST

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகலை நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்த நியமனத்தை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியான ஷெபாலி ரஸ்தான் துகல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். சின்சினாட்டி, சிகாகோ, நியூயார்க், பாஸ்டன் போன்ற நகரங்களில் வசித்துவந்துள்ளார்.

நிர்வாகம் மற்றும் தூதர ரீதியிலான பல முக்கிய பொறுப்புகளுக்கு முக்கிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமையன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அரசியல் செயல்பாட்டாளரான ஷெபாலி ரஸ்தான் பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் வழக்கறிஞராக உள்ளார். அதுமட்டுமன்றி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் மனித உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியக கவுன்சிலுக்கு முன்னாள் அதிபரால் நியமனம் செய்யப்பட்ட ஷெபாலி ரஸ்தான், மேற்கு பிராந்தியத்தின் ஆலோசகராக செயல்பட்டுவருகிறார்.

மனித உரிமை அமைப்பின் சான் பிரான்சிஸ்கோ குழு உறுப்பினராகவும் வேக் ஃபாரஸ்ட் யுனிவர்சிட்டி லீடர்ஷிப் அண்ட் கேரக்டர் கவுன்சில் உறுப்பினராகவும் அவர் பணியாற்றிவருகிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பில் முதுகலை பட்டம் பெற்ற அவர், மியாமி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பு துறை படிப்பை முடித்துள்ளார். 

ஜோ பைடனுக்கான தேசிய பெண்களின் இணைத் தலைவராகவும், ஜனநாயக தேசியக் குழுவில் துணை தேசிய நிதித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு, பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அந்த பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட இவர், ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் வடக்கு கலிபோர்னியா வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.