தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தாடி இல்லையா? வேலை இல்லை, ஆப்கனில்!

ஆப்கனில் அரசுப் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைத்திருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image
கோப்புப்படம்
Updated On :29 மார்ச் 2022, 9:57 am

DIN

ஆப்கனில் அரசுப் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் பணி நீக்கம் செய்யப்படுவர் என தலிபான்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை, ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், ஆப்கனில் அரசுப் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைத்திருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தாடியை ஷேவ் செய்யக்கூடாது, நீண்ட, தளர்வான மேலாடை மற்றும் கால்சட்டை, தொப்பி அல்லது தலைப்பாகை ஆகியவற்றைக் கொண்டுள்ள உள்ளூர் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி ஊழியர்கள் சரியான நேரத்தில் பிரார்த்தனை செய்வதை உறுதி செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை அரசு அலுவலங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆடைக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் இருந்தாலோ அல்லது ஆண் ஊழியர்கள் தாடி வைத்திருக்கவில்லை என்றாலோ பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர். 

பொது ஒழுக்க அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ஆப்கனில் பெண்கள் விமானத்தில் தனியாக பயணிக்கக் கூடாது, பூங்காக்களில் ஆண், பெண் சேர்ந்து செல்லக்கூடாது, 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளி செல்லக் கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் உள்நாட்டிலேயே தலிபான்கள், மக்களின் எதிர்ப்பைப் பெற்று வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.