சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இலங்கையில் நாளை(மே 13) வரை ஊரடங்கு நீட்டிப்பு: இன்று 7 மணிநேரம் தளர்வு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போடப்பட்ட ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மே 2022, 6:50 am

DIN

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போடப்பட்ட ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அரசியல் தலைவர்களின் வீடுகள், பேருந்துகள் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.