கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியது!

உலக மக்கள் தொகை எட்டு பில்லியனாக (800 கோடி) இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 நவம்பர் 2022, 11:28 am

DIN

உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை (800 கோடி) இன்று எட்டியதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 200 கோடியாக அதிகரித்துள்ளது. 1998-ல் 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 2010-ல் 700 கோடியாக அதிகரித்தது. அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2022-ல் மக்கள்தொகை 100 கோடியாக அதிகரித்து, நவம்பர் 15, 2022-ல் உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகை 850 கோடியை எட்டும். எனினும், 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக 2020 ஆம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் குறைந்துள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. 

ஐ.நா.வின் மக்கள்தொகை அறிக்கையில், 2050-ல் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து, காங்கோ, நைஜீரியா, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா இந்த 8 நாடுகளில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

2022 மற்றும் 2050 ஆம் ஆண்டுக்கு இடையில் மக்கள்தொகை குறையும் 61 நாடுகளை ஐ.நா. கணித்துள்ளது. இந்த நாடுகளில் பெரும்பாலானவை ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக இருக்கும். தற்போது, 46 நாடுகளின் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருவதாக ஐ.நா. கணித்துள்ளது.

ஜூலை 11, 2022 அன்று, உலக மக்கள்தொகை தினத்தன்று ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டில், இந்தியாவின் மக்கள்தொகை சீனாவின் மக்கள்தொகையை விட அதிகமாக இருக்கும் என்று கூறியது. இதன் மூலம் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்றும் தெரிவித்தது.

தற்போது சீனாவின் மக்கள் தொகை 1.426 பில்லியனாகவும், இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாகவும் உள்ளது. 2023-ல் இந்தியாவின் மக்கள் தொகை 1.429 பில்லியனாக உயரும் என நம்பப்படுகிறது. மேலும் 2050-ல் இந்த எண்ணிக்கை 1.668 பில்லியனை எட்டும். இந்த நூற்றாண்டின் நடுவில்  சீனாவின் மக்கள் தொகை 1.317 பில்லியனாக குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.