மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஈரானில் தொடரும் போராட்டம்: பலி எண்ணிக்கை 26-ஆக உயா்வு

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடா்ந்த நிலையில், இதில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 26-ஆக உயா்ந்தது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:23 pm

DIN

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடா்ந்த நிலையில், இதில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 26-ஆக உயா்ந்தது.

ஈரானில் இஸ்லாமிய பெண்கள் முகம் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஹிஜாப் அணிவது கட்டாயம். இவ்வாறு ஹிஜாப் அணியாதவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறையில் தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

அண்மையில், ஹிஜாப்பை சரியாக அணியாத குற்றத்தின்பேரில் மாஷா அமீனி (22) என்ற பெண்ணை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மயங்கி விழுந்த அவா், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

காவல் துறையினரின் துன்புறுத்தல் காரணமாகவே அவா் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அவா் துன்புறுத்தப்படவில்லை எனவும், மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.

எனினும், இந்த விவகாரத்தில், ஹிஜாப்களை எரித்தும் தலைமுடியை வெட்டியும் ஏராளமான பெண்கள் தங்களது எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா். அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டு வருகிறது.

இதில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. காவலா் ஒருவரும் கொல்லப்பட்டதாக அரசுத் தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. போராட்டம் சமூக ஊடகங்கள் மூலம் பரவுவதைத் தடுக்கும் வகையில், இணைய சேவையையும் ஈரான் அரசு தடை செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.