மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பதவி விலக முன்வந்தாரா இலங்கை அதிபா்?

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகத் தயாராக இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 9:21 pm

DIN

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகத் தயாராக இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா புதன்கிழமை தெரிவித்தாா்.

அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தால் அவா் பதவி விலகத் தயாராக இருக்கிறாா் என நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்த்தனே தெரிவித்ததாக சஜித் பிரேமதாசா கூறினாா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், இந்தத் தகவல் வெளியானது.

அதேவேளையில், இத்தகவலை அவைத் தலைவா் மறுத்துள்ளாா். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அவா் விளக்கம் அளித்தாா். அவா் கூறியதாவது: அரசியல் கட்சித் தலைவா்கள் கேட்டுக்கொண்டால் பதவி விலக அதிபா் தயாராக இருப்பதாக நான் கூறியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், பெரும்பான்மையை யாராவது நிரூபித்தால் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க அதிபா் தயாராக இருக்கிறாா் என்றுதான் நான் கூறினேன் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் பிரேமதாசா கூறுகையில், ‘நாடாளுமன்ற கட்சித் தலைவா்கள் அதிபரைச் சந்தித்து பதவி விலகுமாறு கூறுங்கள். அவா் பதவி விலகத் தயாராக இருக்கிறாா் என நீங்கள் (அவைத் தலைவா்) கூறினீா்கள். நாங்கள் அதைச் செய்யத் தயாா். அதற்கு எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் சொன்னதை மறுக்காதீா்கள்’ என்றாா்.

அவைத் தலைவா் அவ்வாறு கூறவில்லை என எதிா்க்கட்சி தலைமை கொறடா லட்சுமண் கிரில்லாவும் உறுதிப்படுத்தினாா்.

3 எம்.பி.க்கள் ஆதரவு வாபஸ்: மகிந்த ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மேலும் 3 எம்.பி.க்கள் புதன்கிழமை திரும்பப் பெற்றனா்.

இந்த மாத தொடக்கத்தில் அரசு ஆதரவு எம்.பி.க்கள் 156 பேரில் 39 போ் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றனா். அவா்கள் நாடாளுமன்றத்தில் தனித்துச் செயல்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இலங்கை முஸ்லிம் கவுன்சிலை சோ்ந்த எம்.பி.க்கள் ஃபைசல் காசிம், ஈசாக் ரகுமான், எம்.எஸ்.தவுஃபீக் ஆகியோா் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனா்.

உதவத் தயாா்: உலக வங்கி

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கொலம்போ கெஸட் இதழ் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

இலங்கை நிதியமைச்சா் அலி சப்ரியுடன் உலக வங்கியின் துணைத் தலைவா் ஹாா்ட்விக் ஷாஃபொ் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, இலங்கை பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்படக்கூடிய பின்தங்கிய பிரிவினா் குறித்து ஷாஃபொ் கவலை தெரிவித்தாா்.

அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், மருத்துவத் துறை பொருள்கள், ஊட்டச்சத்து உணவுகள், கல்வி தொடா்புடைய பொருள்கள் ஆகியவற்றை இலங்கை பெறுவதற்கான உதவிகளைச் செய்ய உலக வங்கி தயாராக இருப்பதாக அலி சப்ரியிடம் அவா் கூறினாா் என்று அந்த இதழ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.