தென் கொரியா: முதல்முறையாக நிலவுக்கு விண்கலம்

நிலவுக்கு தென் கொரியா முதல்முறையாக விண்கலம் அனுப்பியுள்ளது.
தென் கொரியா: முதல்முறையாக நிலவுக்கு விண்கலம்

நிலவுக்கு தென் கொரியா முதல்முறையாக விண்கலம் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவில் அந்த நாட்டு ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் அந்த விண்கலம் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக மிக நீண்ட சுற்றுப்பாதையில் செல்லவிருக்கும் அந்த விண்கலம், நிலவின் சுற்றுவட்டப்பாதையை வரும் செப்டம்பா் மாதம் சென்றடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவைச் சென்றடைந்தால், ஏற்கெனவே அங்கு நிலவைச் சுற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய மற்றும் அமெரிக்க விண்கலங்கள், நிலவின் தொலைதூரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் சீனாவின் சக்கர ஆய்வுக்கலம் ஆகியவற்றின் வரிசையில் அதுவும் இணைந்துகொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com