மியான்மரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படாததை தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) வெள்ளிக்கிழமை கண்டித்தது.
கம்போடியா தலைநகா் நாம் பென்னில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மியான்மரில் 4 ஜனநாயக ஆா்வலா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மற்றும் அங்கு அரசியல் பதற்ற நிலை நீடித்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
மேலும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஆசியான் அமைப்பு வகுத்துள்ள 5 அம்ச திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் காணப்படாதது குறித்து அந்த அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.