தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைநகர் குய்டோவில் பெய்த கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் இடிந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அக்கம்பக்கத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.