சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஈக்குவடாரில் நிலச்சரிவு: 24 பேர் பலி

தென் அமெரிக்க நாடுகளிதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.ல் ஒன்றான 

News image

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர்

Updated On :2 பிப்ரவரி 2022, 9:47 am

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் குய்டோவில் பெய்த கனமழையால்  திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

நிலச்சரிவில் சிக்கி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் இடிந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அக்கம்பக்கத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.