
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைநகர் குய்டோவில் பெய்த கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் இடிந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அக்கம்பக்கத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




