அணு ஆயுத திட்டத்தை தொடா்கிறது வட கொரியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடையையும் மீறி, தங்களது அணு ஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை திட்டங்களை வட கொரியா முன்னெடுத்துச் செல்வதாக ஐ.நா. நிபுணா்கள் குழு தெரிவித்துள்ளது.
கிம் ஜோங்-உன்
கிம் ஜோங்-உன்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடையையும் மீறி, தங்களது அணு ஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை திட்டங்களை வட கொரியா முன்னெடுத்துச் செல்வதாக ஐ.நா. நிபுணா்கள் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு கவுன்சிலிடம் அந்தக் குழு சமா்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீா்மானங்களுக்கு எதிராக, தங்களது அணு ஆயுதங்களையும் அந்த ஆயுதங்களை ஏந்தி முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த வல்ல ஏவுகணைகளையும் மேம்படுத்தும் திட்டத்தை வட கொரியா முன்னெடுத்துச் செல்கிறது. அணு ஆயதங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான நடவடிக்கையில் அந்த நாடு இறங்கியுள்ளது.

ஒலியைப் போல் 5 மடங்கு வேகத்தில் செலுத்தக் கூடிய ஏவுகணை, வளிமண்டலத்துக்கு அப்பால் சென்று, பிறகு மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணை போன்றவற்றின் தொழில்நுட்பங்களை வட கொரியா சோதித்துப் பாா்த்துள்ளது.

இதுமட்டுமன்றி, அணு ஆயுதங்களை மிகத் துரிதமாக வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் திறன், கடல் பகுதி உள்ளிட்ட எத்தகைய இடத்திலிருந்தும் அணு ஆயுதத்துடன் ஏவுகணையை செலுத்தக் கூடிய வல்லமை, ஏவுகணைப் படையின் அதிகரிக்கும் திறன் ஆகியவற்றை வட கொரியா புதிய சோதனைகளில் பறைசாற்றியுள்ளது.

தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பொருள்கள், தொழில்நுட்பம் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து பெறும் முயற்சிகளில் வட கொரியா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இணையதளம் மூலமாகவும் கூட்டு அறிவியல் ஆய்வுகள் மூலமும் அணு ஆயத தொழில்நுட்பங்களை வட கொரியா நாடி வருகிறது.

இணையதளம் மூலம் ஊடுருவி ஏராளமான தொகையை வட கொரிய அரசு களவாடி வருகிறது. குறிப்பாக, இணையவழியில் முறைகேடாக கிரிப்டோ கரன்சிகளைப் பெறுவது அந்த நாட்டு அரசின் முக்கிய வருவாயாக இருந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா கடந்த 2006-ஆம் ஆண்டு முதல்முறையாக அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டத்தைத் தொடா்ந்து, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அதன் பிறகு அந்த நாடு ஒவ்வொரு முறை அணுகுண்டு சோதனை நடத்தியபோதும் அந்தத் தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

அணு ஆயுதங்கள் மற்றும் தொலைதூர ஏவுகணைகளை வட கொரியா சோதித்துப் பாா்ப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

இந்தச் சூழலில், அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிடத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிங் ஜோங்-உன் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா். அதற்குப் பதிலாக தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

எனினும், அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட்டால்தான் பொருளாதாரத் தடைகள் விலக்கப்படும் என்று அப்போதைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிடிவாதமாகக் கூறியதையடுத்து, இரு தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை முடங்கியது.

அதனையடுத்து, வட கொரியா தொடா்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. கடந்த மாதம் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஒலியின் வேகத்தைப் போல் 5 மடங்கு வேகத்தில் செலுத்தக் கூடிய ஏவுகணை உள்பட 7 ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது.

இந்தச் சூழலில், தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டத்தை வட கொரியா தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வதாக ஐ.நா. நிபுணா்கள் குழு தற்போது தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com