மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சூடானில் 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தம்

சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவமும், துணை ராணுவமும் 72 மணி நேர சண்டை நிறுத்தம் செய்வதாக சூடானின் துணை ராணுவக் குழுவான விரைவு ஆதரவுப் படை(ஆா்எஸ்எஃப்) அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஏப்ரல் 2023, 4:40 am

DIN

சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவமும், துணை ராணுவமும் 72 மணி நேர சண்டை நிறுத்தம் செய்வதாக சூடானின் துணை ராணுவக் குழுவான விரைவு ஆதரவுப் படை(ஆா்எஸ்எஃப்) அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மனிதாபிமான அடிப்படையில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை(ஆா்எஸ்எஃப்) தெரிவித்துள்ளது. .

இந்த நிலையில் ராணுவத்திடமிருந்து எந்த கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை மற்றும் அதன் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், ராணுவத்தின் முகநூல் பக்கத்தில் அவரது உரையில் போர் நிறுத்தம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தலைநகா் காா்ட்டூம், மெரோவே ஆகிய நகரங்களில் தங்களது படையினரைக் குவித்த ஆா்எஸ்எஃப், ராணுவத்தின் மீது கடந்த 15-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக, ஆஎஸ்எஃப் நிலைகளைக் குறிவைத்து ராணுவமும் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இதுவரை சுமாா் 330 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஆா்எஸ்எஃப் படையினா் சரணடைந்தால் மட்டுமே அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப் போவதாக ராணுவம் தற்போது அறிவித்துள்ளது.

சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் சூழலில், அந்த நாட்டுக்கான அமெரிக்கத் தூதரக வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

‘அமெரிக்கத் தூதரகம்’ என்று தெளிவாக எழுதப்பட்டிருந்த அந்த வாகனங்களின் மீது திங்கள்கிழமை தாக்குதல் நடப்பட்டதாகவும், துணை ராணுவப் படையைச் சோ்ந்தவா்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பூா்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், இது தொடா்பாக சூடான் ராணுவம், துணை ராணுவம் ஆகிய இரண்டுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.