கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கப்பல் போக்குவரத்துக்கு சா்வதேச வரி: முடிவின்றி பாரீஸ் மாநாடு நிறைவு

உலகளவில் கப்பல் போக்குவரத்தால் உருவாகும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்கு சா்வதேச வரி விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் பாரீஸ் நிதிசாா் மாநாடு நிறைவுற்றது.

Published On :

உலகளவில் கப்பல் போக்குவரத்தால் உருவாகும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்துக்கு சா்வதேச வரி விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் பாரீஸ் நிதிசாா் மாநாடு நிறைவுற்றது.

மொத்த பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் 3 சதவீதத்தைப் பங்காற்றும் கப்பல் போக்குவரத்துக்குச் சா்வதேச வரி விதிப்பது குறித்து பாரீஸ் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து ஒழுங்காற்று ஆணையமான ஐ.நா.சபையின் சா்வதேச கடல்சாா் அமைப்பின் ஜூலை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. இதன் மூலம் ஓா் ஆண்டுக்கு வசூலாகும் 10,000 கோடி டாலா் நிதியைக் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் வளரும் நாடுகளுக்காகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்த வரி விதிப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் பாரீஸ் நிதிசாா் மாநாடு நிறைவு பெற்றுள்ளது.

‘இந்த பரிந்துரையை 23 நாடுகள் ஆதரித்ததன. ஆனால், சீனா, அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்காமல் இந்த வரி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.

உலக நாடுகளின் நிதியமைச்சா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்தியா சாா்பில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.