அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இஸ்ரேல் இதற்கு பதில் சொல்லவேண்டும்: அம்னெஸ்டி லெபனான்!

தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக அம்னெஸ்டி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

News image
லெபனான் அல்-பஸ்டான் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்
Updated On :1 நவம்பர் 2023, 12:08 pm

DIN

அரசு சார்பற்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி, அக்.10 முதல் அக்.16 வரையிலான லெபனான் எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்பட்டதாக புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து நடந்து வந்த தாக்குதலில் இஸ்ரேல், இந்த சர்ச்சைக்குரிய வெடிமருந்தைப் பயன்படுத்தியதாக அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

1983 மாநாட்டில் சர்வதேச மனித உரிமை சட்டங்களால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் வெடிமருந்துகளை இஸ்ரேல் மக்கள் குடியிருப்பு மீதும் போர் அல்லாத களத்திலும் பயன்படுத்தியதை ஆதாரங்களோடு முன்வைத்துள்ல அம்னெஸ்டி, இதனை போர்க் குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது. 

தைரா பகுதியில் இஸ்ரேல், வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்து ஏந்திய கணைகளை வீசியது

தைரா பகுதியில் இஸ்ரேல், வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்து ஏந்திய கணைகளை வீசியது

அம்னெஸ்டியின் துணை வட்டார இயக்குனர் அயா மஜூப் பேசும் போது, “இது பயங்கரமான செயலையும் தாண்டியது. சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளது. லெபனான் எல்லை நகரமான தைராவில் அக்.16 நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் வீடுகளும் கார்களும் எரிந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார். 

வெள்ளை பாஸ்பரஸ் என்பது எளிதில் தீப்பற்றக் கூடிய உலோகம், கையெறிகுண்டுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும்.

காற்றில் வீசப்படும் போது எரிந்து அதீத வெம்மையோடு இலக்கைத் தாக்கும். கடுமையான புகையை ஏற்படுத்தும் பாஸ்பரஸ் பட்டாலோ சுவாசித்தாலோ மக்களுக்கு நுரையீரல் சீர்கேடு ஏற்படுவதோடு உறுப்பு செயலிழப்பு, கடுமையான காயங்கள், சிகிச்சை அளிக்க இயலாத தீப்புண்கள் ஆகியவை ஏற்படக்கூடும். உடலின் 10 சதவீத பகுதியில் இந்த வெடிமருந்து பட்டாலே அபாயகரமான விளைவு ஏற்படும்.

லெபனானின் எல்லை கிராமமான ஐடா அல்-சாப் மீது இஸ்ரேலின் தாக்குதல்

லெபனானின் எல்லை கிராமமான ஐடா அல்-சாப் மீது இஸ்ரேலின் தாக்குதல்

40 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலிவ் மரங்கள் இதனால் எரிந்திருக்கின்றன. லெபனான் அரசு, ஐ.நாவில் இது குறித்து போர் குற்றதிற்கான புகாரை இஸ்ரேல் மீது அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் லெபனானின் வேளாண் துறை அமைச்சர் அப்பாஸ் அல் ஹஜ் ஹசான். 

இஸ்ரேல் இந்த வெடிமருந்தைப் பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. இந்தப் போரில் பல முறை பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.