மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்திற்கு நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு 9 டன் அளவிலான நிவாரண உதவிகளை  இராணுவ விமானம் மூலம் அனுப்பியுள்ளது இந்தியா. 

News image
Updated On :7 நவம்பர் 2023, 6:21 am

DIN

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கிவருகிறது. நவம்பர் 7 அன்று 9 டன் அளவிலான நிவாரண உதவிகளுடன் கூடிய இந்திய விமானப்படையின் C-130 J விமானம் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  

பயங்கரமான நிலநடுக்கத்தால் இழப்புகளைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பிவருகிறது. கடந்த ஞாயிறு அன்று அவசர முதலுதவிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை பாதிக்கப்பட்டுள்ள நேபால்கான்ஞ் நகரத்திற்கு இந்தியா அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதாவது, 'இந்தியா தன் அண்டைநாடுகளுக்கு அவசரகாலத்தில் உதவுவதை தன் முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாக வைத்துள்ளது. அதன்படி நேபாளம் பாதிப்பிற்கு உள்ளானதும் முதலில் தன் ஆதரையும், நிவாரணங்களையும் வழங்கியது இந்தியாதான்' எனத் தெரிவித்துள்ளார். 

பாதிப்படைந்த நேபாளத்திற்கு முதன் முதலில் நிவாரணங்களை அனுப்பியது இந்தியாதான் என நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 11 டன் எடைகொண்ட 10 கோடி மதிப்பிலான அந்த நிவாரண உதவியில் மருத்துவப்பொருள்கள், தூங்கும் பைகள், கூடாரம் கட்டத் தேவையான பொருள்கள் ஆகியவை இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுவரை 21 டன்களுக்கும் அதிகமான உதவிகள் நேபாளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக  இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் நேபால் தன் இழப்புகளிலிருந்து மீழ, கட்டுமானம், கல்வி, மருத்துவம் என அனைத்து வகைகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.