அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்த இலங்கை அனுமதி! இந்தியாவின் பாதுகாப்பு?

சீனாவின் ஷி யான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. 

News image
Updated On :25 அக்டோபர் 2023, 2:25 pm

DIN


சீனாவின் ஷி யான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களுக்காக இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இலங்கை அரசு சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது. 

சீனாவில் புறப்பட்டுள்ள ஷி யான் 6 ஆராய்ச்சிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இன்று (அக்.25) நிலைநிறுத்தப்படும் என சர்வதேச கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு இணையதளமான மெரைன் டிராஃபிக் தெரிவிக்கிறது. 

கடந்த ஆண்டு சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கப்பல் மூலம் இந்தியாவின் அணு மின் நிலையம், செயல்பாடுகள், அம்சங்கள் குறித்து உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. 

இலங்கையிலிருந்து 750 கி.மீ தொலைவுக்கு கப்பலிலிருந்து உளவு பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது. கொழும்பு துறைமுகத்திலிருந்து 750 கி.மீ. எனில், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் இதற்குள் அடங்கும்.

இந்நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ஷி யான் 6 கப்பல் ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதிக்க அக்டோபர் 28 வரை அனுமதி அளித்துள்ளதாகவும் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாது எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கபிலா ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். 

எனினும் கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கப்பல் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் கப்பல் என சீன ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதில், 60 பேர் அடங்கிய குழுவும் அடக்கம் என்றும் கடலியல், புவியியல் மற்றும் கடல் சூழலியல் சோதனைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவுக்குட்பட்ட இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சீனாவின் செயல்பாடு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலின் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் கிழக்கு - மேற்காக பாதி எல்லையை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்துகொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.