பாகிஸ்தான்: பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 39 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு கிட்டத்தட்ட 48 பயணிகளுடன் பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் லாஸ்பேலா அருகே பேருந்து திரும்பும் போது பாலத்தின் தூணில் மோதி, பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்தது.
ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தை நெருங்கும் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்!
மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.