‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

இதுவரை 97 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

ஹமாஸ் படையினர் கடத்தி வைத்திருந்த 97 பிணைக் கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

News image

ஹமாஸ் விடுவித்த பிணைக் கைதிகள்

Updated On :30 நவம்பர் 2023, 10:09 am IST

ஹமாஸ் படையினர் கடத்தி வைத்திருந்த 97 பிணைக் கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 240-க்கும் அதிகமானோரை கடத்திச் சென்றனர்.

அவர்களை மீட்கவும், ஹமாஸை அழிக்கவும் இஸ்ரேல் படையினர் காஸா நகரின் மீது ஒரு மாதத்துக்கும் மேல் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 50 பிணைக் கைதிகளை விடுவிக்க 4 நாள்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் படையினருக்கு இஸ்ரேலுக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, கடந்த புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, கூடுதலாக ஒவ்வொரு நாள் போர் நிறுத்துவதற்கு 10 பிணைக் கைதிகள் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை வரை 81 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்திருந்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு இஸ்ரேல் நாட்டின் பெண்கள், குழந்தைகள் 10 பேர், தாய்லாந்தின் 4 பேர், ரஷியாவின் 2 பேர் என மொத்தம் 16 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு வியாழக்கிழமை அதிகாலை விடுதலை செய்துள்ளது.

மேலும் சில நாள்கள் போர் நிறுத்தத்தை நீட்டித்து பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க இஸ்ரேல் அரசு முனைப்பு காட்டி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.