அமெரிக்க எழுத்தாளர் மால்கம் ப்ரென்னர் ஒரு டால்பினுடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியிருப்பது, சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயதான எழுத்தாளர் மால்கம் ப்ரென்னர், `வெட் காடெஸ்’ என்ற புத்தகத்தை, கடந்த 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்.
இந்தப் புத்தகத்தில் மால்கம், விலங்குகளின் மீது காதல் கொள்பவரான `ஸூபைல்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், `வெட் காடெஸ்’ புத்தகத்தில் அவர் கூறியுள்ள `டால்பினுடனான காதல்’ பற்றிய குறிப்பு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு பேசுபொருளாகி உள்ளது.
புத்தகத்தில் மால்கம் கூறியிருப்பதாவது, `` என்னுடைய 20 ஆவது வயதில், ஃபுளோரிடாவின் சரசோட்டாவில் உள்ள ஒரு தீம் பூங்காவின் குளத்தில் புகைப்படங்கள் எடுக்க, எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, டால்பின்களுடன் நீந்தவும் அனுமதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில், டால்பின்களுடன் நான் நீந்தும்போதெல்லாம், டோலி என்ற பெண் டால்பின் மட்டும் என்னுடன் நெருக்கமாவதைக் கண்டேன்.
முதலில் எனக்கு ஆர்வம் இல்லாததால், அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், என்னைக் கவர்வதில், டோலி தொடர்ந்து மும்முரம் காட்டியது.
புலி, கரடியைப் போன்று இரண்டு விநாடிகளில் மனிதர்களைக் கொல்லக்கூடிய விலங்கு, என்மீது காட்டிய நெருக்கம், என்னை வியக்க வைத்தது. பின்னர், நானும் அதன்மீது அன்புகொண்டு, அன்பை வெளிப்படுத்தினேன்.
ஒருவருக்கொருவர் அன்பை உணர்ந்து வெளிப்படுத்தும் இருவரின் உறவில் வெறுக்கத்தக்க வகையில் என்ன உள்ளது? ஆனால், அடுத்த 9 மாதங்களில் பூங்கா மூடப்பட்டதால், டோலியுடனான உறவும் முறியடிக்கப்பட்டது.
டோலி இடமாற்றம் செய்யப்பட்டதால், நான் மனச்சோர்வு அடைந்தது மட்டுமில்லாமல், டோலியும் பிரிவின் தாக்கத்தை அனுபவித்தது.
இதனைத் தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்ட சில காலத்திலேயே டோலி உயிரிழந்தது. டோலியின் உயிரிழப்பு என்னை அதீத சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி, நான் ஐந்து ஆண்டுகள் வரையில் மனச்சோர்வில் விழுந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுஷ்கோடி- தலைமன்னாா் கடல் பகுதியை நீந்திக் கடந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஆட்டிச சிறாா்கள்

மாநில நலனில் ரங்கசாமிக்கு அக்கறையில்லை! - காங்கிரஸ் செய்தி தொடா்பாளா் டோலி ஷா்மா

புதுச்சேரியில் காங்கிரஸின் முதல்வா் வேட்பாளரை முடிவு செய்யவில்லை: தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் மீண்டும் குழப்பம்: தோழமை கட்சிகளின் தொகுதிகளில் நட்புரீதியாக போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவிப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


