தென் கொரியாவில் வெப்ப அலைக்கு 2,300 பாதிப்பு, 21 பேர் பலி!

வெப்பம் தாக்குதல் தொடர்பான நோய்களுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெப்ப பாதிப்பு
வெப்ப பாதிப்பு
Updated on
1 min read

தென் கொரியாவில் வெப்பம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்துள்ளதாக உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெப்ப அலை கொளுத்திவரும் நிலையில், அங்குள்ள மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மே 20 முதல் ஆகஸ்ட் 11 வரையிலான காலகட்டத்தில் வெப்பம் தாக்குதல் தொடர்பான நோய்களுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

வெப்ப பாதிப்பு
பெண் மருத்துவர் கொலை: தேசிய மகளிர் ஆணையக் குழு விசாரணை

இதனிடையே மே 20 முதல் ஆகஸ்ட் 11 வரை வெப்பம் தொடர்பான நோய்களுக்கு மொத்தம் 2,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,139 ஆக இருந்தது.

வெப்ப அலைக்கு கால்நடைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,58,000 கோழிகள் உள்பட 7,03,000 கால் நடைகளும், 8,95,000 வளர்ப்பு மீன்களும் இறந்துள்ளது.

வெப்ப பாதிப்பு
இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம்: மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை தொடரும் என்றும், இரவு நேரங்களில் மேற்குப் பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பகல் நேர வெப்பநிலை நாடு முழுவதும் 30-36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என அந்நாட்டு ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com