அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ஹமாஸ் தலைவர் படுகொலை: வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்!

ஹமாஸ் தலைவரைக் கொன்றது இஸ்ரேல் ராணுவம்தான்!

News image

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு - AP

Updated On :24 டிசம்பர் 2024, 12:14 pm IST

ஈரான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் ஆயுதப்படையினரின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றது இஸ்ரேல் ராணுவம்தான் என்பதை முதல்முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது இஸ்ரேல். இஸ்மாயில் ஹனியேவை தொடர்ந்து, காஸாவில் ஹமாஸின் அடுத்தக்கட்ட தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் இஸ்ரேல் ரானுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியிருப்பதாவது, “யேமன் நாட்டிலுள்ள ஹௌதி ஆயுதப்படையின் உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நிகழ்த்தி அழிக்கும். இஸ்மாயில் ஹனியே, சின்வார், நஸ்ரல்லாவை நாங்கள் கொன்றது போலவே, ஹௌதி படைத் தலைவர்களின் தலைகளை நாங்கள் அறுத்தெறிவோம்” என்று ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது, “இப்போது ஹௌதி பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு ஒரு தெளிவான தகவலை பகிர்கிறேன். நாங்கள்(இஸ்ரேல்) ஹமாஸை, ஹிஸ்புல்லாக்களை வீழ்த்தியுள்ளோம். ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கியுள்ளோம், அவர்களின் ஆயுத தயாரிப்பு அமைப்புகளை சேதப்படுத்தியுள்ளோம்.

அதேபோல, சிரியாவில் அஸாத்தின் ஆட்சியை கவிழ்த்துள்ளோம். தீவினை செய்வோருக்கு எதிராக மரண அடியை நாங்கள் கொடுத்து வருகிறோம். கடைசியாக இப்போது நிலைத்திருக்கும் யேமனில் உள்ள ஹௌதி பயங்கரவாத அமைப்புக்கும் தக்க பதிலடி கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.