ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம், உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க செய்தியாளரின் சிறைக் காவலை மார்ச் இறுதி வரை நீட்டித்துள்ளது.
எவான் கொ்ஷ்கோவிச், அமெரிக்காவின் வால் ஸ்டீரிட் நிறுவனத்தின் செய்தியாளரான இவர் 2023 மார்ச் மாதம் ரஷியாவில் உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டை எவான் கொ்ஷ்கோவிச்சும், வால் ஸ்டீரிட் செய்தி நிறுவனமும் அமெரிக்க அரசு அதிகாரிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
முன்னதாக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தாங்கள் எவானை விடுவிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அரசின் ரகசிய தகவலை பெற முயன்ற போது கையும் களவுமாக எவான் பிடிபட்டதாகவும் இந்த சிறப்பு சேவை எட்டப்பட சில நிபந்தனைகள் உள்ளன எனவும் உடன்படிக்கை எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதின் மறைமுகமாக குறிப்பிடுவது அமெரிக்காவின் நட்பு நாடான ஜெர்மனியில் சிறையில் உள்ள ரஷியரை விடுவிக்கத் தான் எனக் கூறப்படுகிறது.
உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில் அமெரிக்க செய்தியாளா் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


