கராச்சி: பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
அங்கு 2023-இல் நடந்த பயங்கரவாதம் சாா்ந்த வன்முறைச் சம்பவங்களில் 1,524 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயிரிழப்பாகும். வன்முறையில் இறந்தவா்களில் சுமாா் 1,000 போ் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா். 2023-இல் கைபா் பக்துன்கவா மாகாணம்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாக இருந்தது என்று அந்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.