பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரில் 2,40,000 க்கும் அதிகமான பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக ஒரு லிட்டர் தண்ணீரில் முந்தைய கணக்கீட்டைவிட அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தகவல்தான் என்றபோதிலும், தேசிய அறிவியல் அகாதமி இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சித் தரவுகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை மைக்ரோ அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட நிலையில், புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில் நானோ (Nano) அளவிலான பிளாஸ்டிக் துகள் அதிக எண்ணிக்கயில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: விரைவில் சூரியப் புயல்?
இந்த மிக மிக நுண்ணிய துகள்களால் மனித செல்லிற்குள்ளும் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் எஸ்ஆர்எஸ் (SRS microscopy) எனும் புதிய வகை நுண்ணோக்கி தொழில்நுட்பம் மூலம் பிரபல குடிநீர் விற்பனையாளர்களின் பாட்டில் தண்ணீரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் உடல் உறுப்புகளிலும் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த நுண்ணிய துகள்கள், ஜீரணக்கோளாறு, உணவுகளில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றையும் கர்பிணிப்பெண்களின் சிசுவின் உடலுக்குள்ளும் இவை செல்லும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் உணவுப் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்படும் உணவுப் பொருள்கள் மூலமும் இந்த நுண்துகள்கள் உடலுக்குள் புகுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்

1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி மற்றும் அதற்கான காரணங்கள்!
டாக்டர் பட்டம் பெற்ற நற்பணி நாயகன் விஜய்!

வீட்டுவசதித் திட்டத்திற்காக 15 ஏக்கர் நிலத்தை கைபற்றிய மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


