மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறீர்களா? புதிய ஆய்வில் எச்சரிக்கை!

பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில் மிக அதிக அளவில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாகவும் அதன் அபாயங்களையும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்.
Updated On :11 ஜனவரி 2024, 8:21 am

DIN

பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரில் 2,40,000 க்கும் அதிகமான பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரியாக ஒரு லிட்டர் தண்ணீரில் முந்தைய கணக்கீட்டைவிட அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். 

பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தகவல்தான் என்றபோதிலும், தேசிய அறிவியல் அகாதமி இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சித் தரவுகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

இதுவரை மைக்ரோ அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட நிலையில், புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில் நானோ (Nano) அளவிலான பிளாஸ்டிக் துகள் அதிக எண்ணிக்கயில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: விரைவில் சூரியப் புயல்?

இந்த மிக மிக நுண்ணிய துகள்களால் மனித செல்லிற்குள்ளும் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் எஸ்ஆர்எஸ் (SRS microscopy) எனும் புதிய வகை நுண்ணோக்கி தொழில்நுட்பம் மூலம் பிரபல குடிநீர் விற்பனையாளர்களின் பாட்டில் தண்ணீரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் உடல் உறுப்புகளிலும் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த நுண்ணிய துகள்கள், ஜீரணக்கோளாறு, உணவுகளில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றையும் கர்பிணிப்பெண்களின் சிசுவின் உடலுக்குள்ளும் இவை செல்லும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் உணவுப் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்படும் உணவுப் பொருள்கள் மூலமும் இந்த நுண்துகள்கள் உடலுக்குள் புகுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.