பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டிரம்ப் தான் அடுத்த அதிபர்: பிரபல ஜோதிடர் எமி ட்ரிப்

கமலா ஹாரிஸ் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த 2020ஆம் ஆண்டில் கூறியிருந்தார்

கோப்புப் படம்

Published On :

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்று கூறியதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

எமி கூறியிருப்பதாவது, ``டிரம்ப்பின் ஜோதிடக் கணக்குப்படி, அவரது தொழில் மற்றும் இலக்குகளில் கணிக்க முடியாத தன்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அவருக்கு சில புதுவிதமான நிகழ்வுகள் நிகழக்கூடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அரசியலில் ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியில், கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாடு சிகாகோவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கணித்திருந்தார்; அதுமட்டுமின்றி, கமலா ஹாரிஸ் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த 2020ஆம் ஆண்டில் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.