ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை

ஈரான் தலைநகரில் வைத்து இஸ்ரேல் படையினரால் கொலை.

News image

இஸ்மாயில் ஹனியா - Vahid Salemi

Updated On :31 ஜூலை 2024, 9:29 am IST

ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் புதன்கிழமை கொல்லப்பட்டார்.

ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.

ஈரான் நாட்டின் முக்கிய தலைவரான சையத் அலி ஹொசைனி கமேனியுடன் ஆலோசனை செய்த இஸ்மாயில், செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில், தெஹ்ரானில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து புதன்கிழமை காலை இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

இதனை இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்மாயிலின் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை புரிந்த ஹமாஸ் தலைவரை நாட்டின் தலைநகரிலேயே வைத்து கொல்லப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.