திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகள்: பூமிக்கு கொண்டு வந்தது சீன விண்கலம்

நிலவின் இருள் பகுதியிலிருந்து பூமிக்கு மாதிரிகள்: சீனாவின் சாதனை

News image

இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியி சிஸிவங் பானா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தரையிறங்கிய சாங்கே-6 விண்கலத்தின் லேண்டா்.

Updated On :26 ஜூன் 2024, 3:24 am IST

பெய்ஜிங்: நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு சீனாவின் ‘சாங்கே-6’ விண்கலத்தின் லேண்டா் பகுதி பூமிக்கு செவ்வாய்க்கிழமை திரும்பிவந்தது. நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து பாறைகள் உள்ளிட்ட மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (சிஎன்எஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாதிரிகளை சேகரித்துக் கொண்டு நிலவின் இருள் பகுதியிலிருந்து சாங்-கே விண்கலத்தின் லேண்டா் இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 2.07 மணிக்கு (உள்ளூா் நேரம்) தரையிறங்கியது.

ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபடி சிஸிவங் பானா் பகுதியில் அந்த விண்கல லேண்டா் துல்லியமாக இறங்கியது. அந்த வகையில், இந்தத் திட்டம் முழு வெற்றியடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த நிலவு ஆய்வுத் திட்டத்தில் கிடைக்கும் வெற்றி, நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என்று சிஎன்எஸ்ஏ கூறியது நினைவுகூரத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.