பெய்ஜிங்: நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு சீனாவின் ‘சாங்கே-6’ விண்கலத்தின் லேண்டா் பகுதி பூமிக்கு செவ்வாய்க்கிழமை திரும்பிவந்தது. நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து பாறைகள் உள்ளிட்ட மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (சிஎன்எஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாதிரிகளை சேகரித்துக் கொண்டு நிலவின் இருள் பகுதியிலிருந்து சாங்-கே விண்கலத்தின் லேண்டா் இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 2.07 மணிக்கு (உள்ளூா் நேரம்) தரையிறங்கியது.
ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபடி சிஸிவங் பானா் பகுதியில் அந்த விண்கல லேண்டா் துல்லியமாக இறங்கியது. அந்த வகையில், இந்தத் திட்டம் முழு வெற்றியடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்த நிலவு ஆய்வுத் திட்டத்தில் கிடைக்கும் வெற்றி, நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என்று சிஎன்எஸ்ஏ கூறியது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது

கழுதை இறைச்சி ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அனுமதி: சீன நிறுவனம் எச்சரிக்கை எதிரொலி

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு!

நிலவின் மறுபக்கத்தில் ஆா்டெமிஸ்-2 குழு ஆய்வு! மனித வரலாற்றில் தொலைதூரம் பயணித்து சாதனை

ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.1.47 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


