பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாலத்தீவில் குடிநீர் பஞ்சம்: உதவிக்கரம் நீட்டும் சீனா!

சீனாவின் உதவி: மாலத்தீவுக்கு அனுப்பப்பட்ட குடிநீர்

News image
Updated On :27 மார்ச் 2024, 1:36 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கடும் குடிநீர் பஞ்சத்தால் அவதிப்படும் மாலத்தீவுக்கு, திபெத் பனிமலைகளில் இருந்து 1,500 டன் குடிநீரை சீனா அளித்ததாக மாலத்தீவு அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த முடிவு சீனாவின் திபெத் தன்னாட்சி மண்டல தலைவர் யான் ஜின்ஹாய், மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முயீஸை கடந்த நவம்பரில் சந்தித்த போது எடுக்கப்பட்டதாக மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1500 டன் குடிநீர் மாலத்தீவுக்கு வந்து சேர்ந்ததாக எடிஷன்.எம்வி என்கிற இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

திபெத்தில் உயர்ரக தயாரிப்பு நிறுவனங்கள் குடிநீர் உற்பத்தி செய்கின்றன. சுத்தமான, தெளிவான, அதிக கனிமங்கள் கொண்ட நீர் திபெத் பனிப்பாறைகளில் இருந்து பெறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு ஆதரவான அரசு மாலத்தீவில் அமைந்ததுமுதல் சீனா பல்வேறு வகைகளில் மாலத்தீவுக்கு உதவி அளித்து வருகிறது.

மார்ச்சில் மாலத்தீவு அதிபர் முயீஸ், சீனா அபாயகரமில்லாத ஆயுதங்கள் மற்றும் ஆயுத பயிற்சியை மாலத்தீவுக்கு இலவசமாக வழங்கவிருப்பதாக தெரிவித்தார்.

2014-ல் மாலத்தீவு குடிநீர் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தின்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. மாலத்தீவின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா பல்வேறு தவணைகளில் மாலத்தீவுக்கு குடிநீர் அனுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.