இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

நிஜ்ஜார் கொலையில் கைது செய்யப்பட்ட மூவரின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

News image
Updated On :4 மே 2024, 12:36 pm

DIN

கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் புகைப்படங்களை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுர்ரேவில் உள்ள குருத்வாரா வளாகத்தில், நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் கனடிய நாட்டு குடியுரிமை பெற்றவர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கமல்ப்ரீத் சிங், கரன்ப்ரீத் சிங், கோல்டி பிரார் ஆகியோர், நிஜ்ஜாரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் கனடா காவல்துறை அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

நிஜ்ஜார் கொலையில் இவர்கள் மூவருக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, காவல்துறையின் கூட்டு முயற்சியோடு இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வரும் இந்த மூன்று குற்றவாளிகளும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும், பாகிஸ்தாலனின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இருந்துகொண்டு பல்வேறு கும்பல்கள் இந்தியாவில் பல குற்றங்களை செய்துகொண்டிருக்கின்றன. இவர்களை குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வு அமைப்பும் அறிவித்துள்ளது. அவர்கள் பலரும் கனடாவில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பிடமிருந்து தொடர்ந்து பணம் வருகிறது. இவர்களுக்கு எதிராக இந்தியா தரப்பில் ஆதாரங்கள் அளிக்கப்பட்டாலும் கனடா அரசும் காவல்துறையும் ஒத்துழைப்பதில்லை என்றும், தற்போது கனடிய காவல்துறை, இந்த வழக்கைக் கொண்டு வந்து, இந்திய அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயற்சிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அதிகாரிகளுக்கு பங்குள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்ததைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.