மிச்சிகன் மாகாணத்தில் கோழிப் பண்ணையில் பணிபுரியும் ஊழியருக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பண்ணை ஊழியருக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேசான அறிகுறியுடன் இருந்த ஊழியருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் வைரல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு இதுவரை இருவருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக அமெரிக்காவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் கொலராடோ மாகாணத்தில்தான் பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்
1997ல் சீனாவில் முதல் முறையாக மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டன.
பறவைக் காய்ச்சல் எனப்படும் ஹச்5என்1 வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். மேலும் உயிருக்கு ஆபத்தான நிமோனியா காய்ச்சலை இரு உருவாக்கும்.
கம்போடியாவில் 2003 முதல் 2014 வரை 56 பேர் ஹச்5என்1 (H5N1) வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 37 பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.