திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அக். 7 தாக்குதலில் ரஷியா, சீனாவுக்குத் தொடா்பு!

‘அக். 7 தாக்குதலில் ரஷியா, சீனாவுக்குத் தொடா்பு!’

News image

பாதிக்கப்பட்ட பகுதியில் நிக்கி ஹேலி.

Updated On :29 மே 2024, 3:11 am IST

டெல் அவீவ்: இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-இல் நடத்திய தாக்குதலுக்கு ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் பக்கபலமாக இருந்ததாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதா் நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்த நீா் ஆஸ் பகுதிக்கு வந்திருந்த அவா் இது குறித்து கூறியதாவது:

கடந்த அக். 7-ஆம் தேதி இங்கு நடத்தப்பட்ட தாக்குலுக்கு ஈரான் சதித் திட்டம் தீட்டி, பயிற்சியளித்தது. தாக்குதலுக்குத் தேவையான உளவுத் தகவலையும் முக்கிய உதவிகளையும் ரஷியா வழங்கியது. சீனாவின் நிதியுதவி அந்தத் தாக்குதலை நிறைவேற்ற உதவியது. எனவே, அந்தப் படுகொலைகளை நடத்தியது ஹமாஸ் மட்டுமல்ல, இந்த 3 நாடுகளும்தான்.

இந்த விவகாரத்தில் நாம் இனியும் அலட்சியம் காட்டினால், அமெரிக்காவிலும் இதே போன்ற தாக்குதல்களை அந்த நாடுகள் அரங்கேற்றும் என்று அவா் எச்சரித்தாா்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதரம் எதையும் நிக்கி ஹேலி வெளியிடவில்லை. எதிா்க் கட்சியான குடியரசுக் கட்சியைத் சோ்ந்த நிக்கி ஹேலி, வரும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளாா்.