தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

192 நாள்களுக்கு பிறகு பூமி திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

விண்வெளி மையத்தில் 6 மாதங்கள் ஆய்வுக்குப் பிறகு பூமி திரும்பிய சீன வீரர்கள்.

News image

பூமி திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள் - படம்: X/ Chinese Space Station

Updated On :4 நவம்பர் 2024, 2:06 pm IST

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக 3 சீன வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளனர்.

ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்துள்ளது. தியாங்காங் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதி கடந்த 2021 ஏப். 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, யெ குவாங்ஃபூ, லீ கோங், லீ குவாங்சூ ஆகிய மூன்று வீரர்களை அனுப்பினர். இவர்கள் கடண்டஹ் 192 நாள்களாக விண்வெளியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் மே 28 மற்றும் ஜூலை 3ஆம் தேதிகளில் விண்வெளியில் நடந்து சென்று சாதனை படைந்தனர். மேலும், உடைந்த செயற்கைகோள் பாகங்கள் தியாங்காங் விண்வெளி நிலையத்தை தாக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு சாதனங்களை பொருத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் மூவரும் திங்கள்கிழமை அதிகாலை 1.24 மணியளவில் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கினர். வடசீனாவில் உள்ள டோங்ஃபெங் இறங்கும் தளத்தில் அவர்கள் வந்த ஷென்சோ-18 கலன் வெற்றிகரமாக தரையிறங்கியது.

192 நாள்கள் பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு வந்த மூவரும் நலமாக இருப்பதாகவும், ஷென்சோ-18 திட்டம் வெற்றிபெற்றதாகவும் சீன விண்வெளித் துறை அறிவித்துள்ளது.

ஷென்சோ-18 குழுத் தலைவர் சாதனை

ஷென்சோ-18 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்ற வீரர்களின் குழுத் தலைவர் யெ குவாங்ஃபூ, நீண்ட நாள்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் தங்கிய சீன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, அக்டோபர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை ஷென்சோ-13 திட்டத்தின் உறுப்பினராக விண்வெளியில் அவர் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.