வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

192 நாள்களுக்கு பிறகு பூமி திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

விண்வெளி மையத்தில் 6 மாதங்கள் ஆய்வுக்குப் பிறகு பூமி திரும்பிய சீன வீரர்கள்.

News image

பூமி திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள் - படம்: X/ Chinese Space Station

Updated On :4 நவம்பர் 2024, 2:06 pm IST

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக 3 சீன வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளனர்.

ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்துள்ளது. தியாங்காங் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதி கடந்த 2021 ஏப். 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, யெ குவாங்ஃபூ, லீ கோங், லீ குவாங்சூ ஆகிய மூன்று வீரர்களை அனுப்பினர். இவர்கள் கடண்டஹ் 192 நாள்களாக விண்வெளியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் மே 28 மற்றும் ஜூலை 3ஆம் தேதிகளில் விண்வெளியில் நடந்து சென்று சாதனை படைந்தனர். மேலும், உடைந்த செயற்கைகோள் பாகங்கள் தியாங்காங் விண்வெளி நிலையத்தை தாக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு சாதனங்களை பொருத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் மூவரும் திங்கள்கிழமை அதிகாலை 1.24 மணியளவில் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கினர். வடசீனாவில் உள்ள டோங்ஃபெங் இறங்கும் தளத்தில் அவர்கள் வந்த ஷென்சோ-18 கலன் வெற்றிகரமாக தரையிறங்கியது.

192 நாள்கள் பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு வந்த மூவரும் நலமாக இருப்பதாகவும், ஷென்சோ-18 திட்டம் வெற்றிபெற்றதாகவும் சீன விண்வெளித் துறை அறிவித்துள்ளது.

ஷென்சோ-18 குழுத் தலைவர் சாதனை

ஷென்சோ-18 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்ற வீரர்களின் குழுத் தலைவர் யெ குவாங்ஃபூ, நீண்ட நாள்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் தங்கிய சீன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, அக்டோபர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை ஷென்சோ-13 திட்டத்தின் உறுப்பினராக விண்வெளியில் அவர் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.