மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் பலி!

பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 பேர் பலி; 20 பேர் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :21 நவம்பர் 2024, 1:08 pm

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் 10 பேர் கொண்ட பயங்கரவாதி கும்பல், வியாழக்கிழமை (நவ. 21) இருவேறு இடங்களில் பேருந்துகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலினால், பேருந்தில் பயணித்த 6 பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் பலியாகினர்; மேலும், 20 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஷியைட் அமைப்பினர் என்று கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் தேடப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில், புதன்கிழமை (நவ. 20) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினா் 12 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.