
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் 10 பேர் கொண்ட பயங்கரவாதி கும்பல், வியாழக்கிழமை (நவ. 21) இருவேறு இடங்களில் பேருந்துகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலினால், பேருந்தில் பயணித்த 6 பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் பலியாகினர்; மேலும், 20 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஷியைட் அமைப்பினர் என்று கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் தேடப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில், புதன்கிழமை (நவ. 20) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினா் 12 போ் உயிரிழந்தனா்.
இதையும் படிக்க: காஸா மீதான போருக்காக இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்ய ஆணை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.