ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த இடதுசாரி பைத்தியகாரர்களுக்கு நன்றி!! டிரம்ப்

அமெரிக்க ஆட்சியாளர்களை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் விமர்சித்திருப்பது பற்றி...

News image

டொனால்ட் டிரம்ப் - AP

Updated On :29 நவம்பர் 2024, 12:21 pm IST

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்து, பரிதாபமாக தோல்வியடைந்தவர்களுக்கு நன்றி என்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சியாளர்களை விமர்சித்து டிரம்ப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த தீவிர இடதுசாரி பைத்தியகாரர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி. நீங்கள் பரிதாபமாக தோல்வி அடைந்துவிட்டீர்கள். எப்போதும் தோல்வி மட்டுமே அடைவீர்கள்.

அவர்களின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் மிகவும் மோசமாக இருந்ததால், அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல மாபெரும் வெற்றியை தங்களுக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

கவலைப்பட வேண்டாம், நம் நாடு விரைவில் மதிக்கப்படும். நியாயமாகவும் வலுவானதாகவும் மாறும். நீங்கள் அமெரிக்கர்களாக இருப்பதில் முன்பைவிட பெருமைப்படுவீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் பதிவு

டிரம்ப் பதிவு - x

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.