இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஓராண்டில் இரட்டிப்பான பாலஸ்தீன வறுமை நிலை: 74.3%

பாலஸ்தீனத்தில் வறுமை நிலை விகிதம் கடந்த ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

News image
பாலஸ்தீனத்தில் போரால் வீட்டை இழந்த பெண், தனது குழந்தைகளுடன்- AP
Updated On :22 அக்டோபர் 2024, 12:34 pm

DIN

பாலஸ்தீனத்தில் வறுமை நிலை விகிதம் கடந்த ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக காஸாவில் போர் நீடித்துவரும் நிலையில், பாலஸ்தீனத்தின் வறுமை நிலை விகிதம் 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீனத்தில் வறுமையில் இருப்போர் விகிதம் 38.8 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் இதுவரை 26 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வந்துள்ளனர். இதனால் பாலஸ்தீனத்தில் வறுமையில் இருப்போர் எண்ணிக்கை 41 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்டத் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்ததாவது,

போரின் உடனடி விளைவுகள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளான கட்டடங்கள் போன்றவை அழிவதோடு மட்டுமல்லாம, வறுமை விகிதத்திலும் பெரிதும் பாதிக்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தையே பாதிப்புக்குள்ளாக்குகிறது.

சமூக பொருளாதார மதிப்பீடுகள் மூலம் பார்த்தால், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்கள் பாலஸ்தீனத்தை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கித்தள்ளியுள்ளது.

பாலஸ்தீனத்தில் வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு 49.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காஸாவில் போர் இல்லாத சூழலை ஒப்பிடும்போது, ஜிடிபி வளர்ச்சி விகிதம் 35.1 சதவீதம் சரிந்துள்ளது.

பாலஸ்தீனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மனிதாபிமான உதவிகளை வழங்கிவந்தாலும், பாலஸ்தீன பொருளாதாரம் மீண்டும் அதன் முந்தைய இயல்புநிலைக்குத் திரும்புவது கடினம். இதற்கு 10 ஆண்டுகள் அதற்கு மேல் ஆகலாம் எனக் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காஸாவில் 4.2 கோடி டன் கட்டடக் குவியல்கள் உருவாகியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் எல்லைகள் மீது காஸாவின் ஹமாஸ் படையினர் வான்வழித்தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலலில் 1,206 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.