பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

News image

காஸாவில் ஏவுகணை தாக்குதலால் சூழ்ந்த கரும்புகை - AP

Updated On :24 அக்டோபர் 2024, 4:57 pm IST

காஸாவில் பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (அக். 24) வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் உடமைகளை இழந்த மக்கள் தற்காலிக கூடாரம் மைத்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில இடங்களில் பள்ளிக் கூடம் போன்ற கல்வி நிலையங்களில் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஸா எல்லையில் உள்ள பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டெய்ர் அல்-பாலாஹ்விலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள நுசிராத் பகுதியில் அமைந்துள்ள பள்ளி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் அல்-அவ்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பெய்ரூட் பகுதியில் இன்று காலை இஸ்ரேல் ராணுவம் 17 ஏவுகணைகளை வீசியது. முன்னறிவிப்பின்றி நடந்த இந்த தாக்குதலில் 6 கட்டடங்கள் தரமட்டமாகின. இதில் ஒருவர் உயிரிழந்தார். 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - காஸா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதிமுதல் நடைபெற்றுவரும் போரில், இதுவரை காஸாவில் 42,847 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100,544 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் உயிரிழந்தனர். 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.