வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

News image

காஸாவில் ஏவுகணை தாக்குதலால் சூழ்ந்த கரும்புகை

AP

Updated On :24 அக்டோபர் 2024, 11:27 am

DIN

காஸாவில் பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (அக். 24) வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் உடமைகளை இழந்த மக்கள் தற்காலிக கூடாரம் மைத்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில இடங்களில் பள்ளிக் கூடம் போன்ற கல்வி நிலையங்களில் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஸா எல்லையில் உள்ள பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டெய்ர் அல்-பாலாஹ்விலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள நுசிராத் பகுதியில் அமைந்துள்ள பள்ளி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்கள் அல்-அவ்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பெய்ரூட் பகுதியில் இன்று காலை இஸ்ரேல் ராணுவம் 17 ஏவுகணைகளை வீசியது. முன்னறிவிப்பின்றி நடந்த இந்த தாக்குதலில் 6 கட்டடங்கள் தரமட்டமாகின. இதில் ஒருவர் உயிரிழந்தார். 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - காஸா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதிமுதல் நடைபெற்றுவரும் போரில், இதுவரை காஸாவில் 42,847 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100,544 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் உயிரிழந்தனர். 200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.