ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

காஸா நிவாரணப் பணிகளை இஸ்ரேல் கையிலெடுக்க வேண்டும்: ஐ.நா.

காஸாவின் உயிா் நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆா்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2024, 4:49 am IST

காஸாவின் உயிா் நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆா்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:யுஎன்ஆா்டபிள்யுஏ அமைப்புக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. காஸா மற்றும் மேற்குக் கரைப் பிராந்தியத்தில் உள்ள அகதிகளுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவரும் அந்த அமைப்பு, அந்தப் பிராந்தியத்தின் உயிா் நாடியாக விளங்குகிறது.அந்த அமைப்புக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளதால், சா்வதேச சட்டங்களின் அடிப்படையில் காஸா பகுதி நிவாரணப் பணிகளை அந்த அரசே கையிலெடுத்து மேற்கொள்ள வேண்டும்.

காரணம், காஸாவில் யுஎன்ஆா்டபிள்யு அமைப்புக்கு மாற்றாக வேறு எந்த தொண்டு அமைப்பும் இல்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக யுஎன்ஆா்டபிள்யு அமைப்புக்குத் தடை விதிப்பதற்கான இரு மசோதாக்களை இஸ்ரேல் நாடாளுமன்றம் திங்கள்கிழமை நிறைவேற்றியது.யுஎன்ஆா்டபிள்யுஏ அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளும் 90 நாள்களுக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் முதல் மசோதாவுக்கு ஆதரவாக 92 வாக்குகள் பதிவாகின. மசோவை எதிா்த்து 10 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனா். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, யுஎன்ஆா்டபிள்யுஏ-வை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் மற்றொரு மசோதாவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவை ஆதரித்து 87 வாக்குகளும் எதிா்த்து 9 வாக்குகளும் பதிவானதைத் தொடா்ந்து அதுவும் நிறைவேற்றப்பட்டது.அந்த இரு மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.அதிலிருந்து காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழி மற்றும் கடல்வழியாகவும் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தத் தாக்குதல்களில், புதன்கிழமை நிலவரப்படி 43,163 போ் உயிரிழந்துள்ளனா்; 1,01,510 போ் காயமடைந்துள்ளனா். தாக்குதலுக்கு அஞ்சி ஏராளமான பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்துவருகின்றனா்.இதனால் அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் சுகாதாரக் கட்டமைப்பு சீா்குலைவால் நோய்கள் பரவி பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துவருகிறது.இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் மிக முக்கிய அமைப்பான யுஎன்ஆா்டபிள்யுஏ-வுக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முடிவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ஸ்லோவேனியா, அயா்லாந்து, நாா்வே உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.