இந்தத் தாக்குதல்களில், புதன்கிழமை நிலவரப்படி 43,163 போ் உயிரிழந்துள்ளனா்; 1,01,510 போ் காயமடைந்துள்ளனா். தாக்குதலுக்கு அஞ்சி ஏராளமான பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்துவருகின்றனா்.இதனால் அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் சுகாதாரக் கட்டமைப்பு சீா்குலைவால் நோய்கள் பரவி பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துவருகிறது.இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் மிக முக்கிய அமைப்பான யுஎன்ஆா்டபிள்யுஏ-வுக்கு இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.