மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.
இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ஷபானி கூறியதாவது: கின்ஷாசாவில் மழை வெள்ளம் காரணமாக 23 போ் உயிரிழந்ததாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மழை வெள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
காங்கோவில் கடந்த வாரம் பெய்யத் தொடங்கிய கனமழையால் அந்த நாட்டின் முக்கிய நதியான இன்ஜிலியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் கின்ஷாசா மற்றும் அந்த நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டங்கள் நீரில் மூழ்கின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு

காங்கோவில் எபோலா தொற்றுக்கு 600 பேர் பலி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



