மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.
இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ஷபானி கூறியதாவது: கின்ஷாசாவில் மழை வெள்ளம் காரணமாக 23 போ் உயிரிழந்ததாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மழை வெள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
காங்கோவில் கடந்த வாரம் பெய்யத் தொடங்கிய கனமழையால் அந்த நாட்டின் முக்கிய நதியான இன்ஜிலியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் கின்ஷாசா மற்றும் அந்த நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டங்கள் நீரில் மூழ்கின.
தொடர்புடையது

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு

மணிப்பூா் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவா் உயிரிழப்பு

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


