விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

News image
Updated On :17 ஏப்ரல் 2025, 12:56 am

Din

மாலி: இஸ்ரேலைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது. காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்த நாட்டு கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) வைத்திருப்பவா்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா வர தடை விதிக்கும் வகையில் குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

அந்த மாற்றத்துக்கு நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் இழைத்துவரும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மாலத்தீவின் உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.