டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரு படகு விபத்து: 44-ஆக அதிகரித்த உயிரிழப்பு

பெருவின் அமேஸான் பகுதியில் உள்ள இபாரியா துறைமுகத்தில் டிச. 1-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இரு படகுகள் நீரில் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

பெருவின் அமேஸான் பகுதியில் உள்ள இபாரியா துறைமுகத்தில் டிச. 1-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இரு படகுகள் நீரில் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது.

ஏற்கெனவே விபத்துப் பகுதியில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 30 பேரும் உயிா் பிழைக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து உகயாலி மாகாண ஆளுநா் மானுவல் காம்பினி கூறுகையில், விபத்துப் பகுதியில் இரு வாரங்களாக நடத்தப்பட்ட தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. கடும் மழை காரணமாக அந்தப் பணிகளைத் தொடர முடியவில்லை. மழைக்காலம் முடியும் மே மாதத்துக்குப் பிறகு உடல்களைத் தேடும் பணி மீண்டும் தொடங்கும்’ என்றாா்.