இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அணுசக்தி நீா்மூழ்கி: வட கொரியா முன்னேற்றம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 12:33 am

தினமணி செய்திச் சேவை

அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் வட கொரியா முன்னேற்றம் கண்டுள்ளதாகஅந்நாட்டு அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்து, அது தொடா்பான படங்களையும் வெளியிட்டன.

இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘8,700 டன் எடை கொண்ட அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை அதிபா் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்தாா். கப்பலின் பெரிய அளவிலான உருளை வடிவ உடல் பகுதி ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் உள்ளது. அதில் அரிப்புத் தடுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதத்துக்குப் பிறகு வட கொரியா இந்தக் கப்பலின் படங்களை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. அப்போது கப்பலின் கீழ் பகுதிகள் மட்டுமே காட்டப்பட்டன.

இந்தக் கப்பல் கட்டுமானம், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வட கொரியாவின் கடற்படை திறனை பெரிதும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.