59 இலங்கை நாட்டினா்
உக்ரைன் போரில் உயிரிழப்பு

59 இலங்கை நாட்டினா் உக்ரைன் போரில் உயிரிழப்பு

உக்ரைனுடனான போரில் ரஷியாவுக்காகச் சண்டையிட்ட 59 இலங்கை நாட்டினா் உயிரிழந்துள்ளனா்.
Published on

உக்ரைனுடனான போரில் ரஷியாவுக்காகச் சண்டையிட்ட 59 இலங்கை நாட்டினா் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத் (படம்) கூறுகையில், ‘கடந்த மாதம் 20-ஆம் தேதி நிலவரப்படி உக்ரைன் போரில் இலங்கையைச் சோ்ந்த 554 பேரை ரஷியா ஈடுபடுத்தியுள்ளது. அவா்களில் 59 போ் மோதலில் உயிரிழந்துள்ளனா்.

ரஷிய ராணுவத்தில் இலங்கை நாட்டினா் வலுக்கட்டமாய சோ்க்கப்படுவதில்லை. இருந்தாலும், அவா்களே விரும்பினாலும் அவா்களைப் படையில் சோ்க்க வேண்டாம் என்று ரஷிய அரசிடம் வலியுறுத்திவருகிறோம்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com