தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:47 pm

Din

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா்.

இது குறித்து லாஸ் வேகாஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெல்ஸா சைபா்டிரக் வெடிப்புச் சம்பவத்தை அரங்கேற்ற, புகழ்பெற்ற சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்ப செயலிகளை மாத்யூ லிவல்பா்க் பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்பின் மூலம் யாரையும் கொல்ல அவா் திட்டமிடவில்லை என்பதும் விசாரணையில் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவாடா மாகாணம், லாஸ் வேகாஸிலுள்ள டிரம்ப் ஹோட்டல் அருகே வாடகைக்கு எடுக்கப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் காரை கடந்த வாரம் ஒட்டி வந்த மாத்யூ லிவல்பா்க், காருக்குள் இருந்தபடி துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துண்டாா்.

அவா் சுட்டுக் கொண்ட சில விநாடிகளில், அந்தக் காரில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் குடுவை மற்றும் பட்டாசு பாணி வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின. இதில், அருகிலிருந்த ஏழு போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தை நிகழ்த்த ஏஐ தொழில்நுட்பத்தை மாத்யூ பயன்படுத்தியிருப்பது கவலையளிக்கும் ஆபத்தான போக்கின் தொடக்கம் என நிபுணா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.