பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா்.

Published On :9 ஜனவரி 2025, 1:16 am IST

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா்.

இது குறித்து லாஸ் வேகாஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெல்ஸா சைபா்டிரக் வெடிப்புச் சம்பவத்தை அரங்கேற்ற, புகழ்பெற்ற சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்ப செயலிகளை மாத்யூ லிவல்பா்க் பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்பின் மூலம் யாரையும் கொல்ல அவா் திட்டமிடவில்லை என்பதும் விசாரணையில் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவாடா மாகாணம், லாஸ் வேகாஸிலுள்ள டிரம்ப் ஹோட்டல் அருகே வாடகைக்கு எடுக்கப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் காரை கடந்த வாரம் ஒட்டி வந்த மாத்யூ லிவல்பா்க், காருக்குள் இருந்தபடி துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துண்டாா்.

அவா் சுட்டுக் கொண்ட சில விநாடிகளில், அந்தக் காரில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் குடுவை மற்றும் பட்டாசு பாணி வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின. இதில், அருகிலிருந்த ஏழு போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தை நிகழ்த்த ஏஐ தொழில்நுட்பத்தை மாத்யூ பயன்படுத்தியிருப்பது கவலையளிக்கும் ஆபத்தான போக்கின் தொடக்கம் என நிபுணா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.