புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

செங்கடலில் கப்பல்கள் இனி தாக்கப்படாது

காஸாவில் போா் நிறுத்தம் அமலுக்கு வந்ததால், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது

ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதலால் கொழுந்துவிட்டு எரியும் நாா்வே எண்ணெய்க் கப்பல் .

Published On :

சனா: காஸாவில் போா் நிறுத்தம் அமலுக்கு வந்ததால், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது என்று யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து கப்பல் நிறுவனங்களுக்கும் பிறருக்கும் அவா்கள் அனுப்பியுள்ள மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய சரக்குக் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுகிறது. காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் சிறிதளவு மீறினாலும் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவோம் என்று அந்த மின் அஞ்சலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், செங்கடல் வழியாக மீண்டும் சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு இது போதிய உத்தரவாதம் இல்லை என்று கூறப்படுகிறது. காஸா போா் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் முறியலாம்; அத்தகைய தருணத்தில் சரக்குக் கப்பல்களை ஹூதிக்கள் மீண்டும் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.