ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

News image
Updated On :30 ஜனவரி 2025, 1:30 am IST

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னா் ராஜபட்ச ஆட்சியின்போது கொழும்பு நகரின் மையப் பகுதியில் நடைபெற்றுவந்த கிருஷ் ஹோட்டல் கட்டுமான திட்டத்துக்கு இந்தியா கடனுதவி அளித்தது. அதில் ரூ.7 கோடியை (இலங்கை மதிப்பில்) நமல் ராஜபட்ச முறைகேடாகப் பயன்படுத்தி, ரக்பி விளையாட்டை உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. கிருஷ் ஹோட்டல் கட்டடம் நிறைவடையாமலேயே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அரைகுறையாக உள்ளது.

இது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் நமல் ராஜபட்ச கடந்த 2016-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். ஆனால் அதற்குப் பிறகு அந்த வழக்கு முன்னெடுத்துச் செல்லப்படாமல் இருந்துவந்தது.

இந்தச் சூழலில், கடந்த நவம்பரில் அனுர குமார திசநாயக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு ராஜபட்ச குடும்பத்தினா் மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, கிருஷ் ஹோட்டல் முறைகேடு வழக்கில் நமல் ராஜபட்ச மீதான குற்றச்சாட்டை கொழும்பு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் நமல் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஜபட்ச குடும்பத்தினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளது இந்தத் தீா்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது’ என்று விமா்சித்துள்ளாா்.

ஏற்கெனவே, இதே போன்ற முறைகேடு வழக்கில் மகிந்த ராஜபட்சவின் இளைய மகன் யோஷித்த ராஜபட்சவை போலீஸாா் கடந்த வாரம் கைது செய்தது நினைவுகூரத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.