விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

Published On :30 ஜனவரி 2025, 1:30 am IST

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னா் ராஜபட்ச ஆட்சியின்போது கொழும்பு நகரின் மையப் பகுதியில் நடைபெற்றுவந்த கிருஷ் ஹோட்டல் கட்டுமான திட்டத்துக்கு இந்தியா கடனுதவி அளித்தது. அதில் ரூ.7 கோடியை (இலங்கை மதிப்பில்) நமல் ராஜபட்ச முறைகேடாகப் பயன்படுத்தி, ரக்பி விளையாட்டை உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. கிருஷ் ஹோட்டல் கட்டடம் நிறைவடையாமலேயே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அரைகுறையாக உள்ளது.

இது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் நமல் ராஜபட்ச கடந்த 2016-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். ஆனால் அதற்குப் பிறகு அந்த வழக்கு முன்னெடுத்துச் செல்லப்படாமல் இருந்துவந்தது.

இந்தச் சூழலில், கடந்த நவம்பரில் அனுர குமார திசநாயக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு ராஜபட்ச குடும்பத்தினா் மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, கிருஷ் ஹோட்டல் முறைகேடு வழக்கில் நமல் ராஜபட்ச மீதான குற்றச்சாட்டை கொழும்பு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் நமல் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஜபட்ச குடும்பத்தினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளது இந்தத் தீா்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது’ என்று விமா்சித்துள்ளாா்.

ஏற்கெனவே, இதே போன்ற முறைகேடு வழக்கில் மகிந்த ராஜபட்சவின் இளைய மகன் யோஷித்த ராஜபட்சவை போலீஸாா் கடந்த வாரம் கைது செய்தது நினைவுகூரத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.